ஹார்டுவேர் கடையில் கைவரிசை காட்டிய கொள்ளையனை மடக்கிப் பிடித்த கோவை போலீசார்

கோவை: சுக்ரவார்பேட்டை மில் சாலையில் உள்ள மகாதேவ் ஹார்டுவேர்ஸில் கொள்ளையடித்த நபரை ரயில் நிலையம் முன்பு வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை: சுக்ரவார்பேட்டை மில் சாலையில் உள்ள மகாதேவ் ஹார்டுவேர்ஸில் கொள்ளையடித்த நபரை ரயில் நிலையம் முன்பு வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

மரக்கடை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கேவாராம் என்பவருக்கு சொந்தமான மகாதேவ் ஹார்டுவேர் என்ற கடையின் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்தநிலையில், ஹார்டுவேர் கடையில் கொள்ளை போன சம்பவம் தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. 

இதில் கோவை மாநகர காவல் துணை ஆணையர் (குற்றப்பிரிவு) பெருமாள் முன்னிலையில் உதவி ஆணையர் (குற்றப்பிரிவு) சோமசுந்தரம் தலைமையில் ஆர்.எஸ்.புரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஈஸ்வரன் மற்றும் அவர்களது குழுவினர் இணைந்து சந்தேகிக்கப்பட்ட ஹிம்தாரம் என்பவரை தேடி வந்தனர். 



இந்த நிலையில், சந்தேகிக்கப்பட்ட ஹிம்தாரம் என்பவரை நேற்று கோவை ரயில் நிலையம் முன்பு வைத்து போலிசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து களவுபோன ரூ.10 லட்சத்து 54 ஆயிரத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...