நிரம்பியது சோலையாறு அணை : நிரம்பி வருகின்றன கோவை மாவட்ட அணைகள்

கோவை: வால்பாறையில் உள்ள சோலையாறு அணை நிரம்பியதைத் தொடர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோவை: வால்பாறையில் உள்ள சோலையாறு அணை நிரம்பியதைத் தொடர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் அணைகள் நிரம்பி வருகின்றன. சோலையார் அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. இந்த அணையில் தற்போது 130.51 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 3957.29 கன அடியாக உள்ளது. 



அணையில் இருந்து 1014.81 கன அடி விடுவிக்கப்பட்டு பைபாஸ் வழியாகவும், சேடல் வழியாக 29.28 கன அடி நீர் பரம்பிகுளம் அணைக்கு செல்கிறது.

ஆழியாறு அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி. இந்த அணையில் தற்போது நீர்மட்டம் உயர்ந்துள்ளது. விரைவில் முழுவதுமாக நிரம்பும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிறுவாணி அணையைப் பொறுத்தவரையில் தற்போது நிரம்பியுள்ளதாக தெரிகிறது. இவ்வாறு அணைகள் நிரம்பியுள்ள காரணத்தால் மேற்குமண்டலத்தில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேவைக்கு அதிகமான நீர் இருப்பதால், இந்த ஆண்டு கோவை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. 

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...