நலத் திட்டங்களுக்காக ரோட்டரி பவுண்டேஷனுக்கு 1.5 லட்சம் அமெரிக்க டாலர் நிதியுதவி

கோவை: இந்த வருட ரோட்டரி கிளப் நலத் திட்டங்களுக்காக ரோட்டரி பவுண்டேஷனுக்கு 1.5 லட்சம் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.


கோவை: இந்த வருட ரோட்டரி கிளப் நலத் திட்டங்களுக்காக ரோட்டரி பவுண்டேஷனுக்கு 1.5 லட்சம் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 

கோவை ஹிந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் இன்று காலை ரோட்டரி கிளப் 3201 மாவட்ட ஆளுநர் பதவியேற்பு விழா மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் வெஸ்ட் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. 



தொடர்ந்து, ரோட்டரி கிளப் 3201 மாவட்ட ஆளுநராக பதவியேற்றுக்கொண்ட ஏ.வி. பதி பேசுகையில், "இந்த மாவட்ட ஆளுநர் பதவி எனக்கு காலம் தந்த பரிசு. இந்த பரிசை மதிப்பு மிக்கதாக ஆக்க முழு முயற்சியுடன் பாடுபடுவேன். இயற்கை மற்றும் மக்களின் வாழ்க்கை சீரமைத்தல் நமது கடமை ஆகும். அதற்கான பணிகளை இன்றே தொடங்கிவிட்டேன். கொச்சின் யுனைட்டெட் அமைப்பு நமது ரோட்டரி பவுன்டேஷனுக்கு 1.50 லட்சம் அமெரிக்க டாலரை நிதியுதவியாக வழங்கியுள்ளது. இதற்காக அவர்களுக்கு எனது சார்பாகவும் உங்களது சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். 

மேலும் பல அமைப்புகள், தனி நபர்கள், டாலர்களாக இன்று நிதி வழங்கியுள்ளார்கள். இன்று மட்டும் மொத்தமாக 3 லட்சம் அமெரிக்க டாலர்கள் நிதி கிடைத்துள்ளது. இந்த ஆண்டு 10 லட்சம் நிதி பெற இலக்கு வைத்துள்ளோம். 

நமது ரோட்டரி கிளப் சார்பில் இந்த ஆண்டு 'இயற்கையின் வழித்தடங்கள்' என்ற மையக்கருத்தை வைத்து நமது பயணத்தை தொடங்குவோம். திட்டங்களும், செயல்பாடுகளும் இதையொட்டியே அமைந்திருக்கும். நமது இந்த ஆண்டு லட்சியமாக இயற்கையை காக்கும் வகையில் 10 லட்சம் மரக்கன்றுகளை நட உள்ளோம். இதன் முன் முயற்சியாக இன்று மட்டும் கோவையில் சுமார் 1300 மரக்கன்றுகளை நட்டுவைத்துள்ளோம். 

பொது மக்களுக்கு பத்து லட்சம் லிட்டர் அளவு சுகாதார குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வோம். பசியால் வாடும் 10 லட்சம் பேருக்கு உணவு கிடைக்க வழி செய்வோம். பத்து லட்சம் குழந்தைகளின் வாழ்வில் ஒளி ஏற்றி வைப்போம். ரோட்டரி தலைமைக்கு சமுதாய பணியாற்ற பத்து லட்சம் அமெரிக்க டாலர்களை நமது மாவட்டத்தின் மூலம் வழங்குவோம்." என்று பேசினார்.

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...