செங்கல் தயாரிக்க நீர் ஆதாரத்தை அழிக்கலாமா?: இயற்கை ஆர்வலர்கள் குமுறல்

கோவை: ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்ற நியூட்டனின் கூற்று அனைத்து விதங்களிலும் பொருந்தும் வகையிலேயே அமைந்துள்ளது.

கோவை: ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்ற நியூட்டனின் கூற்று அனைத்து விதங்களிலும் பொருந்தும் வகையிலேயே அமைந்துள்ளது.

இயற்கையை பொறுத்தவரையில் இது முற்றிலும் உண்மை. வளங்களை சுரண்டும் போது அது கொடுக்கும் எதிர்வினை மனிதனை இயற்கை முறையில் வாழ விடுவதில்லை.



தடாகம் பகுதியில் வளங்கள் சுரண்டப்படுவது கண்கூடத் தெரிந்தாலும் அதனை கேட்பாரில்லை. சின்னவேடம்பட்டி ஏரிக்கு நீர்வழிப்பாதை முற்றிலுமாக ஆக்கிரமிக்கப்பட்டது இதற்கு உதாரணம்.

இந்த ஏரிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து நீர் வந்தாலும், அதிகமாக மேற்குத்தொடர்ச்சி மலைகளில் இருந்து கிடைக்கும் நீர் தடாகம் பகுதியை கடந்து வருவது தான். ஆனால், மண் எடுப்பதற்காக முப்பது அடி வரை நிலத்தை தோண்டி நீர் வழிப்பாதையை முற்றிலுமாக மறித்து செங்கல் சூலை உரிமையாளர்கள் அத்துமீறலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.



இது குறித்து கவுசிகா நதி மீட்புக்குழுவை சேர்ந்த செல்வராஜ் கூருகையில், " ஆயிரத்திற்கு மேற்பட்ட செங்கல் சூலைகள் தடாகம் பகுதியை சுற்றிலும் அமைந்துள்ளன. அந்த பகுதியில் மூன்று அடிக்கு மணல் எடுக்க மட்டுமே அவர்களுக்கு உரிமை உள்ளது. ஆனால், சட்ட விரோதமாக முப்பது அடி வரை மண் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலை மோசமானதாக அமைந்துள்ளது. சூழல் தொடர்பான செய்தியைச் சேகரிக்க சென்றபோது தான் இந்த அத்துமீறல் தெரியவந்தது. அரசு உடனடியாக இந்த பிரச்சனையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு வளங்களைச் சுரண்டினால், நீராதாரம் பாதிக்கப்படும். இதனை அனைவரும் உணர வேண்டும்." என்றார்.

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...