கோவையில் கஞ்சா வழக்கில் வாலிபர் கைது : போலீசாருடன் வாக்குவாதம் நடத்திய உறவினர்கள்

கோவை: குனியமுத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை வழக்கில் சம்பந்தப்பட்ட வாலிபரை கைது செய்ய சென்ற போலீசாரிடம் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: குனியமுத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை வழக்கில் சம்பந்தப்பட்ட வாலிபரை கைது செய்ய சென்ற போலீசாரிடம் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் நிஷார். இவர் கடந்த சில மாதங்களாக அந்த பகுதியில் கஞ்சா வியாபாரம் செய்து வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் குனியமுத்தூர் போலீசார் நிஷாரை கைது செய்வதற்காக நேற்று அவரது வீட்டுக்குச் சென்றனர். 

இந்த நிலையில், நிஷாரை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது உறவினர்களும், நண்பர்களும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற கூடுதல் போலீசார், வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிஷாரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவரிடமிருந்த 500 கிராம் கஞ்சாவையும் கைப்பற்றியிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...