தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்: அரசு பணிகள் பாதிப்பு

கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கிராம மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படைத் தேவைகள் பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது.

கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கிராம மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படைத் தேவைகள் பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது. 

பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதித்தை ஊராட்சி செயலாளர்களுக்கு வழங்குதல், உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்திடுதல், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிடுதல் உள்ளிட்ட 27 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



கோவை மாவட்டத்தில் 228 கிராம பஞ்சாயத்துக்கள், 12 பஞ்சாயத்து யூனியன்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் 600-க்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.



இதனால் கிராம மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படைத் தேவைகள் பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது. இதனிடையே மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகேசன், செயலாளர் முத்துராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...