தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்: அரசு பணிகள் பாதிப்பு

கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கிராம மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படைத் தேவைகள் பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது.

கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கிராம மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படைத் தேவைகள் பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது. 

பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதித்தை ஊராட்சி செயலாளர்களுக்கு வழங்குதல், உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்திடுதல், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிடுதல் உள்ளிட்ட 27 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



கோவை மாவட்டத்தில் 228 கிராம பஞ்சாயத்துக்கள், 12 பஞ்சாயத்து யூனியன்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் 600-க்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.



இதனால் கிராம மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படைத் தேவைகள் பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது. இதனிடையே மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகேசன், செயலாளர் முத்துராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...