கோவையில் குட்கா குடோனுக்கு வைக்கப்பட்டிருந்த சீலை உடைக்க முயன்றவர்கள் கைது

கோவை: பொன்னையராஜபுரத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட குடோன் உரிமையாளர் மற்றும் கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர்.


கோவை: பொன்னையராஜபுரத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட குடோன் உரிமையாளர் மற்றும் கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர்.

அரசின் உத்தரவின் பேரில் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட பான்மசாலா குட்கா குறித்த ஆய்வினை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே ராஜவீதி, டவுன்ஹால், காந்திபார்க் போன்ற பகுதிகளில் உள்ள குடோன்களில் மற்றும் பெரிய கடைகளில் பதுக்கி வைக்கப்பட்ட குட்கா பொருட்களை கைப்பற்றி, சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்த சூழலில், பொன்னையராஜபுரம் பகுதியில் கடந்த 2-ம் தேதி குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அந்த பகுதிக்கு சென்ற அதிகாரிகள் குடோனை சோதனை செய்தனர். அப்போது இரண்டு டன் குட்கா பொருட்கள் அங்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, அசோக்குமார் என்பவருக்கு சொந்தமான அந்த குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.



இந்நிலையில், சீல் வைக்கப்பட்ட குடோனை உடைத்து குட்கா பொருட்களை எடுத்து செல்ல முயன்றதாக குடோன் உரிமையாளர் அசோக் மற்றும் அவரது கூட்டாளிகள் காசிவிசுவநாதன், சலீம், அஸ்ரப், சுரேஷ் மற்றும் பாபு ஆகிய ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து சிறையிலடைத்தனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...