திருப்பூர் தொழிலதிபருக்கு பணம் கேட்டு கொலை மிரட்டல் : இருவர் கைது

திருப்பூர்: திருப்பூரில் பனியன் நிறுவன தொழிலதிபரிடம் ரூ. 30 லட்சம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் கைது செய்தனர்.


திருப்பூர்: திருப்பூரில் பனியன் நிறுவன தொழிலதிபரிடம் ரூ. 30 லட்சம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் கைது செய்தனர். 

மங்கலம் அடுத்துள்ள சுல்தான்பேட்டை பகுதியில் லூர்து சேவியர் என்பவர் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில், லூர்து சேவியருக்கு இரு நாட்களுக்கு முன்பு மாலை 6 மணியளவில், அவருடைய செல்போனிற்கு மர்ம அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் ரூ. 30 லட்சம் பணம் உடனடியாக கொடுக்க வேண்டும், இல்லாவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், பனியன் நிறுவனத்தில் அவர் மேற்கொண்டு வரும் நடவடிக்கை குறித்தும் தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த லூர்து சேவியர், கொலை மிரட்டல் தொடர்பாக திருப்பூர் மத்திய போலீசில் புகார் அளித்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து, விசாரணை மேற்கொண்ட போலீசார், செல்போன் எண் சிக்னலை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கொலை மிரட்டல் விடுத்தது லூர்து சேவியரின் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் பார்த்தசாரதி மற்றும் தற்போதைய ஊழியர் வசந்த் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...