தாராபுரம் தலைமை தபால் அலுவலகத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் இன்று தொடக்கம்

திருப்பூர் : தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சார்பில் பயணிகள் வசதிக்காக தாராபுரம் தலைமை தபால் அலுவலகத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

திருப்பூர் : தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சார்பில் பயணிகள் வசதிக்காக தாராபுரம் தலைமை தபால் அலுவலகத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.



தாராபுரம் தாலுகா உட்பட்ட பகுதியில் சுமார் 2.75 லட்சம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டுமெனில், 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பழனிக்கும், சுமார் 48 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருப்பூருக்கும் சென்று வந்தனர். இதனால், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யவும், ரயிலில் பயணம் செய்யவும் பயணிகள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். 

இந்நிலையில், ஈரோடு மக்களவை உறுப்பினர் செல்வகுமார சின்னையன், தாராபுரம் மக்களின் வசதிக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு அமைக்க தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்திற்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இது தபால் நிலைய முன்பதிவு மையத் திட்டம் 1,000 என்ற திட்டத்தில் தாராபுரம் தலைமை தபால் அலுவலகத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் அமைக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. அதன்பேரில் தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சார்பில் தாராபுரம் தலைமை தபால் அலுவலகத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் இருந்து சுமார் 0.5 கிலோ மீட்டர் தொலைவில் தபால் நிலைய ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் அமைந்துள்ளது. 



தாராபுரம் தலைமை தபால் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ரயில் டிக்கெட் முன்பதிவு மையத் தொடக்க விழாவில் மக்களவை உறுப்பினர் எஸ்.செல்வகுமார சின்னையன், மேற்கு மண்டல தபால் துறை ஜெனரல் மரியம்மா தாமஸ், தெற்கு ரயில்வே சேலம் கோட்ட மேலாளர் யு.சுப்பாராவ், முதுநிலை வணிக மேலாளர் விஜூவின் ஆகியோர் பங்கேற்றனர்.

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் ஏற்கனவே இதுபோன்ற தபால் அலுவலக ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் பள்ளிபாளையம் மற்றும் ராசிபுரம் (நாமக்கல் மாவட்டம்), பாப்பநாயக்கன்புதூர் (கோவை மாவட்டம்), காந்திநகர் (திருப்பூர் மாவட்டம்), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு மாவட்டம்) செயல்பட்டு வருகிறது.



தாராபுரம் ரயில் டிக்கெட் முன்பதிவு மையத்தில் பயணிகள் அனைத்து ரயில் நிலையங்களுக்கு செல்ல டிக்கெட் பதிவு செய்யலாம். அதேபோல, பதிவு செய்த டிக்கெட்டுகளை தபால் அலுவலகத்தில் ரத்து செய்யலாம். இரண்டாம் வகுப்பு மற்றும் படுக்கை வசதி கொண்ட ஒவ்வொரு டிக்கெட் முன்பதிவுக்கு ரூ. 15-ம், உயர் ரக வகுப்புகளுக்கு (சேர் கார், 3-ம் வகுப்பு ஏசி) ரூ. 20-ம், முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு ஏ.சி. டிக்கெட் பதிவுக்கு ரூ. 30-ம் சேவை வரியாக வசூலிக்கப்படும். அனைத்து வேலை நாள்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் செயல்படும். 



இந்த ரயில் டிக்கெட் முன்பதிவு மையத்தினை தாராபுரம் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு பயனடையலாம் என தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...