சூயஸ் ஒப்பந்த தகவல்களை வெளியிட வேண்டி கோவையில் தர்ணா: முன்னாள் மாமன்ற உறுப்பினர் கைது

கோவை: மாநகர பகுதிகளில் 24 மணிநேர குடிநீர் திட்டத்திற்காக சூயஸ் நிறுவனத்தோடு போடப்பட்ட ஒப்பந்தம் குறித்த தகவல்களை வெளியிட வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான பத்மநாபன் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று தர்ணாவில் ஈடுபட்டார்.

கோவை: மாநகர பகுதிகளில் 24 மணிநேர குடிநீர் திட்டத்திற்காக சூயஸ் நிறுவனத்தோடு போடப்பட்ட ஒப்பந்தம் குறித்த தகவல்களை வெளியிட வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான பத்மநாபன் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று தர்ணாவில் ஈடுபட்டார்.



அப்போது செய்தியாளர்களிடம் பத்மநாபன் கூறுகையில், "இத்திட்டத்திற்காக கடந்த ஜனவரி மாதம் தனியார் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆறு மாதம் ஆகியும் மாநகராட்சி நிர்வாகம் இதுகுறித்த எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. 

அந்த தனியார் நிறுவனம் மட்டுமே அவர்களது இணையதளத்தில் ஒப்பந்தம் குறித்து செய்தி வெளியிட்டனர். எனவே சுயஸ் நிறுவனத்தோடு போடப்பட்ட ஒப்பந்தத்தின் நகல், வேலைக்கான உத்தரவு நகல், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நகல் ஆகியவற்றை உடனடியாக வெளியிடுமாறு மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால், இன்று மாலை அல்லது நாளை ஒப்பந்த நகல் வெளியிடப்படும் என்று உதாசீனமாக பதில் கூறுகிறார்.

இது போன்ற மக்கள் விரோத நடவடிக்கை தொடர்ந்தால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்." என்றார்.



இதனை தொடர்ந்து, தர்ணாவில் ஈடுபட்ட முன்னாள் மாமன்ற உறுப்பினர் பத்மநாபனை உக்கடம் காவல் நிலைய போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...