தமிழகத்தில் மிக மோசமான நிலையில் இயங்கும் 16 ஆயிரம் பேருந்துகளை மாற்ற வேண்டும்- சி.ஐ.டி.யு.

கோவை: தமிழகத்தில் மிக மோசமான நிலையில் இயங்கும் 16 ஆயிரம் பேருந்துகளை மாற்ற வேண்டும் என்று சி.ஐ.டி.யு., தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க மாநில தலைவர் அ.சவுந்திரராசன் கூறியுள்ளார்.

கோவை: தமிழகத்தில் மிக மோசமான நிலையில் இயங்கும் 16 ஆயிரம் பேருந்துகளை மாற்ற வேண்டும் என்று சி.ஐ.டி.யு., தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க மாநில தலைவர் அ.சவுந்திரராசன் கூறியுள்ளார்.

 

அரசு போக்குவரத்து சங்க ஊழியர் மாநாடு உக்கடத்தை அடுத்த கோட்டைமேடு பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட சி.ஐ.டி.யு., தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க மாநில தலைவர் அ.சவுந்திரராசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

சட்டசபையில் நடைபெற்ற போக்குவரத்து தொடர்பான மானிய கோரிக்கையில் முறையான எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை. பயணிகளுக்கான சேவையை மேம்படுத்தவோ அல்லது தொழிலாளர் கோரிக்கையை நிறைவேற்றாத வகையில் மானிய கோரிக்கை அறிவிப்புகள் உள்ளது. 

பேருந்துகள்

தமிழகத்தில் மிக மோசமான நிலையில் இயங்கி வரும் 16 ஆயிரம் பேருந்துகளை மாற்ற வேண்டி உள்ளது. அதை மாற்ற அதிக நிதி ஒதுக்கீடு செய்து மேம்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், அரசு அதனை செய்யாமல் நடத்துனர்கள் இல்லாத பேருந்துகளை இயக்க அரசு முடிவெடுத்துள்ளது.

இதற்கு முன்பு ஏற்கனவே கொண்டு வந்த இதுபோன்ற திட்டம் வெற்றி அடையவில்லை. இதில், அனைத்து தொழிற்சங்கம் சார்பாக கூட்டம் கூட்டி போராட்டம் அறிவிப்பு வெளியிட உள்ளோம். நடத்துனர் இல்லா பேருந்து அறிவிப்பை அரசு திரும்ப பெற வேண்டும்.

நடத்துனர் இல்லா பேருந்து

சிக்கனம் என்ற பெயரில் நடத்துனர் இல்லா பேருந்து இயக்குவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மோட்டார் வாகன சட்டப்படி நடத்துனர்கள் இல்லாமல் பேருந்துகளை இயக்க முடியாது. 50 ஆயிரம் சிறு குறு தொழில்கள் மூடப்பட்டுள்ளதாக அரசே அறிவித்துள்ளது. ஐந்து லட்சம் பேர் வேலை இழந்துள்ள நிலையில் வேலை வாய்ப்பினை உருவாக்க தொழிற்சாலைகள் உருவாக்கி வேலை வாய்ப்பினை அரசு உருவாக்க வேண்டும்.

கட்டண உயர்வால் பேருந்தில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பட்ஜெட்டில் 10 ஆயிரம் பேருந்துகளுக்கான தொகையை ஒதுக்கினால் தான் பேருந்து சேவை சிறப்பாக இருக்கும்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...