கூட்ட நெரிசலை குறைக்க சென்னை-எர்ணாகுளம் வரை சிறப்பு ரயில்கள்

கோவை: பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக சென்னை- எர்ணாகுளம் மற்றும் சென்னை- நாகர்கோவில் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை: பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக சென்னை- எர்ணாகுளம் மற்றும் சென்னை- நாகர்கோவில் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

வரும் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்படும் இந்த ரயில் சேவைக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்க உள்ளதாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. 

சென்னையில் இருந்து எர்ணாகுளம் செல்லும் ரயில் (Train No.06005 ) ஆகஸ்ட் 3 மற்றும் 31-ம் தேதிகளில் சென்னையில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்படுகிறது. 

இதே போல், சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரயில் (Train No.06007 ) ஆகஸ்ட் 7, 14 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்படுகிறது. 

சென்னை-எர்ணாகுளம் செல்லும் ரயில் திருப்பூர், கோவை மார்க்கமாக கேரளா செல்கிறது. 

சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரயில் சேலம், நாமக்கல், மதுரை, திருநெல்வேலி வாயிலாக நாகர்கோவிலை அடைகிறது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...