ஆலாந்துறை ஈஷா கிராம மருத்துவமனையில் 7-ம் தேதி இலவச சிறப்பு மருத்துவ முகாம்

கோவை : ஆலாந்துறையில் உள்ள ஈஷா கிராம மருத்துவமனையில் வரும் 7-ம் தேதி இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளதாக ஈஷா நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை : ஆலாந்துறையில் உள்ள ஈஷா கிராம மருத்துவமனையில் வரும் 7-ம் தேதி இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளதாக ஈஷா நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இது குறித்து ஈஷா கிராம மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கத்தின் கீழ் ஆலாந்துறையில் ஈஷா கிராம மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு மிக குறைந்த கட்டணத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது இலவச மருத்துவ முகாம்களும் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, வரும் ஜூலை 7-ம் தேதி இலவச சிறப்பு மருத்துவ முகாம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் தலைவலி, கழுத்து வலி, முதுகு வலி, பக்கவாதம், வலிப்பு நோய் போன்ற நரம்பியல் நோய்களுக்கும்,  பல் சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளுக்கும் மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை இலவசமாக வழங்கப்படும். தேவைப்படும் நோயாளிகளுக்கு இலவசமாக பல் எக்ஸ்-ரே எடுக்கப்படும் மற்றும் சலுகை விலையில் மேல் சிகிச்சையும் அளிக்கப்படும்.

மேலும், பொது மருத்துவப் பிரிவின் கீழ் வரும் அனைத்து உடல் நல கோளாறுகளுக்கும் மருத்துவர்களிடம் ஆலோசனைகள் பெறலாம். மருந்து, மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 94425 90021, 0422-2651298 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...