பணத்திற்காக கோவையைச் சேர்ந்த பூவியாபாரியைக் கடத்திய கும்பல் கைது

கோவை: கோவையில் பணத்திற்காக பூ வியாபாரியைக் கடத்திய கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்து மாவட்ட மத்திய சிறையில் அடைத்தனர்.

கோவை: கோவையில் பணத்திற்காக பூ வியாபாரியைக் கடத்திய கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்து மாவட்ட மத்திய சிறையில் அடைத்தனர்.

ஆர்.எஸ்.புரம் லிங்கப்பச்செட்டி வீதியைச் சேர்ந்த பூ வியாபாரி விஷ்ணுராஜ்(38) என்பவரை கடந்த மாதம் 30-ம் தேதி மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர். அவரிடம் இருந்து ரூ.1.62,000 பணத்தை பறித்துக் கொண்ட கும்பல், திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கடுமையாக தாக்கிவிட்டு, இறக்கிவிட்டுச் சென்றனர். இதையடுத்து, விஷ்ணுராஜ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கோவை மாநகர காவல் ஆணையாளர் கே. பெரியய்யா உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் குற்றவாளிகளான சந்தோஷ் (22), தினகரன் (33), சதாம் உசேன் (23), நாகராஜ் (26), அரவிந்த் (23), ஹரிபிராத் (19) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து குற்ற வழக்கில் தொடர்புடைய சொத்துக்களும் கைப்பற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், தங்களது குற்றத்தை அவர்கள் ஒப்புக் கொண்டனர். பின்னர், கைது செய்யப்பட்டவர்கள், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...