உக்கடம் மீன் மார்க்கெட்டில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு : அழுகிய மீன்கள் பறிமுதல்

கோவை: உக்கடம் மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்புத் துறை மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வில் அழுகிய நிலையில் இருந்த பத்து கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.



கோவை: உக்கடம் மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்புத் துறை மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வில் அழுகிய நிலையில் இருந்த பத்து கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவை மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் மாநகரில் உள்ள பெரும்பாலான ஆவின் பாலகங்களில் சோதனை நடத்தினர். இந்த நிலையில், உக்கடம் பகுதிகளில் செயல்பட்டு வரும் மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்புத் துறை மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.



அங்கு மொத்தமுள்ள 110 கடைகளில் மீன்களுக்கென்றே பிரத்யேகமாக செயல்படும் 48 கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், மீன்கள் நல்ல நிலையில் உள்ளதா? அதனைப் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ள ஐஸ் கட்டிகள் நல்ல நிலையில் உள்ளதா? பதப்படுத்த ஏதேனும் ரசாயனங்கள் போடப்பட்டுள்ளதா? என்பவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 கிலோ அழுகிய மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.



இது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை கூறுகையில், "ஆய்வின் போது மீன்களை விற்க பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தக் கூடாது என விற்பனையாளர்களிடம் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மீன்கள் சுத்தம் மற்றும் சுகாதாரமானதாக விற்பனை செய்யப்படுகிறதா? என பார்க்கப்பட்டது. மீன் செதில்களை குளக்கரையில் கொட்டக்கூடாது என்றும், மீன்களை பதப்படுத்த அதற்கேற்ற நீல நிற ஐஸ் கட்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது." என்றார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...