சமூக செயற்பாட்டாளர் வளர்மதிக்கு ஜாமீன்: அடக்குமுறை பெரிய போராட்டத்திற்கு வழிவகுக்கும் என பேச்சு

சேலம்: சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டதால் கைது செய்யப்பட சமூக செயற்பாட்டாளர் வளர்மதி 15 நாட்களுக்கு பின் அவர் நேற்று ஜாமீனில் வெளியே வந்தார்.

சேலம்: சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டதால் கைது செய்யப்பட சமூக செயற்பாட்டாளர் வளர்மதி 15 நாட்களுக்கு பின் அவர் நேற்று ஜாமீனில் வெளியே வந்தார்.

சேலம் - சென்னை எட்டு வழி பசுமைச் சாலை திட்டத்துக்கு நிலம் எடுத்துக்கொண்டிருக்கும்போது கடந்த 19-ம் தேதி ஆச்சாங்குட்டப்பட்டியில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களிடம் பெரியார் பல்கலைக்கழக மாணவி வளர்மதி பேசிக்கொண்டிருந்தார். அப்போது காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். பின்னர், அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தது,  ஊழியர்களை மிரட்டியது போன்ற வழக்குகள் அவர் மீது பதிவுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, 15 நாள்கள் கழித்து நேற்று வளர்மதி ஜாமீனில் வெளியே வந்தார். சிறையிலிருந்து வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், : "ஆளும் அ.தி.மு.க., அரசு ஒட்டுமொத்தமாக அனைவரையும் காவல்துறையைக் கொண்டு மிரட்டி அச்சுறுத்தி மத்திய அரசின் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமக்குக் கொடுத்திருக்கும் உரிமையை வழங்காமல் பேச்சுரிமைக்கும் கருத்துரிமைக்கும் எதிராக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. நான் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துப் பேசியதில் என்ன குற்றம் இருக்கிறது. நிகழ்ச்சிகளில் கலந்து பேசியதற்கெல்லாம் வழக்கு போட்டு சிறையில் தள்ளுகிறார்கள். மத்திய அரசுக்கு அடிபணிந்து எடப்பாடி பழனிசாமி அரசு செயல்பட்டு வருகிறது. கைது செய்வதால் சாதித்து விடலாம் என்று நினைப்பது தவறு. இப்படி தொடர்ந்து அடக்குமுறையை ஏவினால் அது மிகப்பெரிய போராட்டமாக உருவெடுக்கும்.'' என்றார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...