சூயஸ் ஒப்பந்தத்தை எதிர்த்து கோவையில் தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்: முன்னாள் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ., கைது

கோவை: சூயஸ் நிறுவனத்துடன் மாநகராட்சி நிர்வாகம் கையெழுத்திட்டுள்ள குடிநீர் விநியோக ஒப்பந்த்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் இன்று தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை: சூயஸ் நிறுவனத்துடன் மாநகராட்சி நிர்வாகம் கையெழுத்திட்டுள்ள குடிநீர் விநியோக ஒப்பந்த்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் இன்று தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் என்ற நிறுவனத்துடன் மாநகராட்சி நிர்வாகம் 26 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளது. இதற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.



இந்நிலையில், சூயஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தி.மு.க., சார்பில் தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிங்காநல்லூர் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான தி.மு.க.,வினர் கலந்து கொண்டனர்.



கோவையைச் சேர்ந்த அமைச்சர் வேலுமணி, சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளதை பொதுமக்களுக்கு தெரிவிக்காமல் மறைத்து விட்டதாகவும், சூயஸ் நிறுவனத்துடன் 26 ஆண்டுகளுக்கு போடப்பட்ட ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.



மேலும், ஜனநாயக ரீதியாக போராட்டத்தில் ஈடுபட காவல்துறை அனுமதி மறுப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.,வினர் குற்றம்சாட்டினார். தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, எம்.எல்.ஏ., கார்த்திக் உட்பட அக்கட்சியைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.



Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...