வனப்பகுதிகளில் உள்ள அரசு ஓய்வறைகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கத் தடை

வனப்பகுதிகளில் இருக்கும் அரசுக்கு சொந்தமான வன ஓய்வறைகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

வனப்பகுதிகளில் இருக்கும் அரசுக்கு சொந்தமான வன ஓய்வறைகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. 

வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் அரசு பங்களாக்கள் மற்றும் வன ஓய்வறைகள் சட்டவிரோத செயல்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரித்த நீதிபதிகள் மதன் பி. லோக்பூர் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் :- வனப்பகுதிகளில் உள்ள அரசு ஓய்வறைகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கக் கூடாது. மேலும், வனத்துறை அதிகாரிகள் வனப்பகுதிகளில் தங்கி, ஆய்வு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக மட்டுமே இதுபோன்ற ஓய்வறைகள் அமைக்கப்பட்டுள்ளது. பழைய திட்டங்கள் மற்றும் தாழ்வானப் பகுதிகளில் அமைந்துள்ள அரசு வன ஓய்வறைகள் மற்றும் பங்களாக்களை உயர்த்திக் கட்டுவது போன்றவை உச்சநீதிமன்றம் அனுமதியுடன் செயல்படுத்த வேண்டும். வனப்பகுதிகளில் இருக்கும் இந்த அறைகளைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு அதிகாரம் இல்லை. மேலும், வனப்பகுதிக்குள் மேற்கொள்ளப்படவிருக்கும் வசதிகளை மத்திய அதிகாரக்குழு பராமரிக்கும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...