தமிழ் மொழி தற்போதைய தொழில்நுட்பத்தோடு வளர்ச்சியடைய வேண்டும்: கோவையில் பத்ம ஸ்ரீ அனந்தகிருஷ்ணன் பேச்சு

கோவை: தமிழ் மொழி தற்போதைய தொழில்நுட்பத்தோடு வளர்ச்சியடைய வேண்டும் என்று வேளாண் பல்கலையில் 17-வது உலக தமிழ் இணைய மாநாட்டில் பத்ம ஸ்ரீ அனந்தகிருஷ்ணன் பேசியுள்ளார்.

கோவை: தமிழ் மொழி தற்போதைய தொழில்நுட்பத்தோடு வளர்ச்சியடைய வேண்டும் என்று வேளாண் பல்கலையில் 17-வது உலக தமிழ் இணைய மாநாட்டில் பத்ம ஸ்ரீ அனந்தகிருஷ்ணன் பேசியுள்ளார்.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மூன்று நாள் நடைபெறும் உலக தமிழ் இணைய மாநாடு இன்று தொடங்கியது. வேளாண் பல்கலை, உலக தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் மற்றும் மாநில திட்டக்குழு இணைந்து நடத்தும் இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். 



இந்த மாநாட்டில், அண்ணா பல்கலை.,யின் முன்னாள் துணை வேந்தர் பத்ம ஸ்ரீ அனந்தகிருஷ்ணன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- 

தமிழை இணையத்துடன் இணைக்க வேண்டும். தற்போதைய காலகட்டத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் அறிவியல் தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியாகின்றன. இந்த கட்டுரைகளை தமிழ் இணையத்துடன் இணைத்தால் அது தமிழ் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும். தமிழ் மொழி தற்போதைய தொழில்நுட்பத்தோடு வளர்ச்சியடைய வேண்டும். கடந்த 1980-ம் ஆண்டு முதல் இதற்காக செயலாற்றி வருகிறோம்.

தமிழ் மொழிக்கான பிரத்தியேக தேடுதளம் ஒன்றை அமைக்கும் போது, விக்கிப்பீடியாவில் தமிழ் முதல் மூன்று மொழிகளில் வருவதற்கான வாய்ப்பு அதிகம். பல்வேறு மென்பொருள் நிறுவனங்களில் தமிழ் வழிக்கல்வி பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரித்து வருகிறது. அவர்கள் வித்தியாசமான சிந்தனைகள் கொண்டவர்கள் என்று மென்பொருள் நிறுவனத்தின் நிர்வாகத்தினர் கருதுகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, பள்ளி கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன் பேசுகையில், "தற்போது பல்வேறு மென்பொருள் கட்டுமான நிறுவனங்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மென்பொருட்களில் தமிழ் மொழியினை நிறுவதல் தொடர்பான இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்த பின் கட்டாயமாக தமிழ் இணைய பயன்பாட்டாளர்கள் அதிகரிப்பார்கள்." என்றார். 



Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...