திருப்பூரில் 11 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

திருப்பூர்: மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த 47 புதிய பேருந்துகளில் முதற்கட்டமாக 11 பேருந்துகளின் சேவையை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்.

திருப்பூர்: மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த 47 புதிய பேருந்துகளில் முதற்கட்டமாக 11 பேருந்துகளின் சேவையை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழக அரசால் வழங்கப்பட்ட புதிய பேருந்துகளின் தொடக்க விழா இன்று திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்திற்கு  47 புதிய பேருந்துகள் ஒதுக்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக இன்று 11 பேருந்துகள் மட்டும் மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கப்பட்டது.



இந்த சேவையை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேருந்துகள் திருப்பூரில் இருந்து திருச்சி, சேலம், கோவை, மதுரை மற்றும் பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது. மேலும், மூன்று பேருந்துகள் அண்டை மாநிலமான கேரளாவுக்கு இயக்கப்படுகிறது.



நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், "திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்." என்று தெரிவித்தார்.



Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...