குடியிருப்புகளை ஒதுக்கித்தர வேண்டி வாலாங்குளம் பகுதி மக்கள் மாநகராட்சியில் மனு

கோவை: குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை உடனடியாக ஒதுக்கித் தர வேண்டி வாலாங்குளம் பகுதி பொதுமக்கள் மாநகராட்சி துணை ஆணையாளரிடம் இன்று மனு அளித்தனர்.


கோவை: குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை உடனடியாக ஒதுக்கித் தர வேண்டி வாலாங்குளம் பகுதி பொதுமக்கள் மாநகராட்சி துணை ஆணையாளரிடம் இன்று மனு அளித்தனர்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட எட்டு குலங்களில் ஒன்றான வாலாங்குளக் கரையை ஒட்டி இருந்த வீடுகளை அகற்றி, அங்கு வசித்தவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அம்மன்குளம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கிட உத்தரவிடப்பட்டது.



குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டாலும், 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு இன்று வரை வீடுகள் ஒதுக்கிடாமல், மாநகராட்சி நிர்வாகமும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகளும் தங்களை அலைக்கழிப்பதாக அவர்கள் புகாரளித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தருவதாக கூறி வீடுகளை இடித்து நான்கு வருடங்கள் ஆகியும் குடியிருப்பு ஒதுக்கப்படவில்லை. கடந்த வருடம் நவம்பர் மாதம் குலுக்களில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு ஏழு நாட்களில் வீடு ஒதுக்கப்படும் என்றும், அதற்கான தொகை ரூ.21,000 உடனடியாக கட்ட வேண்டும் என்றும் கூறிச்சென்றனர். 



அதனால், வட்டிக்கு கடன் வாங்கி இந்தத் தொகையை கட்டினோம். ஆனால், ஒன்பது மாதங்கள் முடிந்தும் இன்று வரை வீடு ஒதுக்கப்படவில்லை. வாடகை வீட்டில் வசிப்பதோடு, வாங்கிய கடனுக்கும் வட்டி கட்டிக் கொண்டிருக்கிறோம். எனவே மாநகராட்சி தலையிட்டு உடனடியாக குடியிருப்புகள் ஒதுக்கித் தரவேண்டும்." என்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...