அமெரிக்காவில் நடைபெற்ற உலக அளவிலான ஆணழகன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற திருப்பூர் வாலிபர்

திருப்பூர்: அமெரிக்காவில் நடைபெற்ற உலக அளவிலான ஆணழகன் போட்டியில் இந்தியா சார்பில் சென்ற திருப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தனசேகர் சாம்பியன் பட்டம் வென்றார்.


திருப்பூர்: அமெரிக்காவில் நடைபெற்ற உலக அளவிலான ஆணழகன் போட்டியில் இந்தியா சார்பில் சென்ற திருப்பூரைச் சேர்ந்த வாலிபர் தனசேகர் சாம்பியன் பட்டம் வென்றார்.



திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் வசித்து வருபவர் தனசேகர் (21). தனது பள்ளி பருவம் முதலே பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று வந்த தனசேகர் அடிக்கடி உடற்பயிற்சி செய்து எப்பொழுதும் தனது உடலை பிட்டாக வைத்துக் கொள்வார்.

கல்லூரியில் நடந்த ஆணழகன் போட்டியில் தங்கம் வென்றார். பின்னர், பல்கலைக் கழகம் அளவில் நடைபெற்ற போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்றார். தொடர்ந்து மிஸ்டர். கோயம்புத்தூர் போட்டியில் பங்கேற்று ஓவர் ஆல் சாம்பியன் பட்டம் வென்றார். 

மீண்டும் மிஸ்டர்.தமிழ்நாடு, மிஸ்டர்.இந்தியா போட்டியிலும் சாம்பியன் பட்டம் பெற்ற தனசேகர் தனது வெற்றி மைல்கல்லில் மேலும் ஒரு மகுடமாக அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடந்த ஜூன் 28-ம் தேதி நடைபெற்ற உலக அளவிலான ஆணழகன் 'மிஸ்டர் மசில்-2018' போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 



ஜப்பான், கொரியா, பாகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் இந்தியா சார்பில் சென்ற ஒரே போட்டியாளர் தனசேகர். இவர் 22 வயதிற்குட்பட்ட பிசிக் பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

உலக ஆணழகன் தனசேகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்த ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. சிங்கப்பூரில் வருகிற டிசம்பர் 8-ம் தேதி நடைபெறும் போட்டியில் ஏசியன் சாம்பியன் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வேன்." என்றார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...