இண்டெக்ஸ் விவசாய கண்காட்சி கொடீசியாவில் 13-ம் தேதி தொடக்கம்

கோவை: கோவையில் நடைபெற உள்ள இண்டெக்ஸ் விவசாய கண்காட்சியில் பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் ஒருங்கிணைந்த பால் பண்ணை என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நடைபெற உள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் நடைபெற உள்ள இண்டெக்ஸ் விவசாய கண்காட்சியில் பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் ஒருங்கிணைந்த பால் பண்ணை என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நடைபெற உள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்ட சிறு தொழிற்சாலைகள் சங்கமான கொடீசியா சங்கம் சார்பில் ஆண்டுதோறும் இண்டெக்ஸ் என்ற பெயரிலான விவசாய தொழில்நுட்ப கண்காட்சி நடைபெற்று வருகிறது. இவ்வாண்டிற்கான 18-வது இண்டெக்ஸ் கண்காட்சி வருகிற 13-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை கோவை கொடீசியா அரங்கில் நடைபெற உள்ளது. 

இது குறித்த செய்தியாளர் சந்திப்பு அச்சங்க வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் ராமசாமி, "விவசாய துறை பல்வேறு சவால்களை சந்தித்து வரும் நிலையில் இக்கண்காட்சி சிறு, குறு விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும். 



இயந்திரம் சார்ந்த துறையாக விவசாய தொழிலை மாற்ற வேண்டிய தருணம் இது. இக்கண்காட்சியில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன." என்றார். 

கொடீசியா தலைவர் ராமமூர்த்தி கூறும் போது, "கடந்தாண்டு இக்கண்காட்சியில் 60 கோடி ரூபாய் அளவிற்கு நேரடி வர்த்தகமும், 100 கோடி ரூபாய் அளவிற்கு தொழில் விசாரணைகளும் வந்தது. இவ்வாண்டு 80 கோடி ரூபாய் அளவிற்கு நேரடி வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கிறோம். இக்கண்காட்சி மூலம் விவசாயிகள் பலனடைவதோடு கோவை மாவட்டத்தில் உள்ள சிறு குறு தொழிற்சாலைகளும் தொழில் வாய்ப்புக்களை பெருக்கிக்கொள்ள வாய்ப்பு ஏற்படும்." என்றார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...