பழம்பெரும் பின்னணி பாடகி பி.சுசீலாவிற்கு இசைமேதை பாலமுரளிகிருஷ்ணா விருது

மேட்டுப்பாளையம்: மறைந்த பாலமுரளி கிருஷ்ணாவின் 88-வது பிறந்த நாளையொட்டி, பாடகி பி.சுசீலாவிற்கு “பாலமுரளி நாத மகோத்சவ்” விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

மேட்டுப்பாளையம்: மறைந்த பாலமுரளி கிருஷ்ணாவின் 88-வது பிறந்த நாளையொட்டி, பாடகி பி.சுசீலாவிற்கு “பாலமுரளி நாத மகோத்சவ்” விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற விழாவில் மறைந்த இசை மேதை பாலமுரளிகிருஷ்ணாவின் பெயரில் ஆண்டுதோறும் வழங்கப்படும் “பாலமுரளி நாத மகோத்சவ்” விருது பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவிற்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

தனது இசை திறமையால் பெரிதும் போற்றப்பட்டு நாட்டின் உயரிய விருதான பத்மவிபூஷன் விருதை பெற்ற டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவின் பெயரில், ஆண்டுதோறும் அவரது நினைவு அறக்கட்டளை சார்பில் இசைத்துறையை சேர்ந்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. இன்று அவரது 88-வது பிறந்த தினத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் உள்ள ஸ்ரீ சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில் அவரது பெயரிலான “டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா கலையரங்கம்” என்ற ஆடிட்டோரியம் திறந்து வைக்கப்பட்டது. இதனை பிரபல நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம் திறந்து வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் பாலமுரளிகிருஷ்ணா குழுவினரின் கர்நாடக இசை கச்சேரி நடத்தப்பட்டது. பின்னர், நடைபெற்ற விழாவில் 2018-ம் ஆண்டிற்கான “பாலமுரளி நாத மகோத்சவ்” விருது பிரபல பழம்பெரும் பின்னணி பாடகி பி.சுசீலாவிற்கு வழங்கப்பட்டது. இவ்விருதினை மூத்த இசைக்கலைஞர் டாக்டர் டி.வி.கோபாலகிருஷ்ணன் வழங்கினார். பாலமுரளிகிருஷ்ணா தங்களது இசைகுரு என தெரிவித்து அவரது சாதனைகள் குறித்து பத்மா சுப்பிரமணியம் மற்றும் பி.சுசீலா ஆகியோர் பேசினர். 

நிகழ்ச்சியின் இறுதியில் செய்தியாளர்களிடம் பி.சுசீலா பேசிய போது, மறைந்த பாலமுரளிகிருஷ்ணாவுடன் இணைந்து பாடிய தமிழ் திரைப்பாடலான “தங்கரதம் வந்ததே” என்ற என்ற பாடலின் சில வரிகளை பாடினார்.



Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...