டாஸ்மாக் தகராறில் ஈடுபட்ட மூன்று பேர் கைது: 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை: கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டி அருகே டாஸ்மார்க்கில் தகராறில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட 3 பேரில் இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.


கோவை: கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டி அருகே டாஸ்மார்க்கில் தகராறில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட 3 பேரில் இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

காமராஜர்புரத்தைச் சேர்ந்த கௌதம் (24), கண்ணப்பன் நகர் சேர்ந்த சுஜி மோகன் (25), கணபதியைச் சேர்ந்த பிரவின் (23) ஆகியோர் கடந்த மாதம்  7-ம் தேதி சின்னவேடம்பட்டியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு மது அருந்தச் சென்றனர். அவர்கள் அங்கிருந்த சிவா என்பவரிடம் மதுபானம் கேட்டு தகராறு செய்து, கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி விட்டு சென்றுவிட்டனர்.

இந்த புகாரின்பேரில் போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதில் கௌதம், சுஜிமோகன் ஆகிய 2 பேர் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருப்பது தெரியவந்தது. எனவே, அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் ஆணையர் பெரியய்யாவுக்கு சரவணம்பட்டி போலீசார் பரிந்துரை செய்தனர். இதையடுத்து, அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் ஆணையர் பெரியய்யா உத்தரவிட்டார். அதன்படி, கோவை மத்திய சிறையில் இருக்கும் கௌதம் மற்றும் சுஜிமோகன் ஆகியோரிடம் அதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...