பராமரிப்புப் பணியின் போது அடுத்தடுத்து மின்கம்பங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு

திருப்பூர்: திருப்பூர் அருகே மின் பராமரிப்புப் பணியின் போது அடுத்தடுத்து இரு மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருப்பூர்: திருப்பூர் அருகே மின் பராமரிப்புப் பணியின் போது அடுத்தடுத்து இரு மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



குமரன் சாலையில் இன்று காலை முதல் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இதனால், குமரன் சாலை, கோர்ட் வீதி ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்பட்டிருந்தன. குமரன் சாலையில் உள்ள ஒரு உயர் மின்கம்பத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டிருந்த போது, திடீரென அச்சாலையில் இருந்த மின்கம்பங்கள் அடுத்தடுத்த சாயத் தொடங்கின. இதையடுத்து, உடனடியாக அந்தப் பகுதியில் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. 



பின்னர்,  உடனடியாக வந்த மின்வாரிய ஊழியர்கள் அப்பகுதி முழுவதும் மின்சாரத்தை தற்காலிகமாக நிறுத்தி, மின் கம்பங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால், திருப்பூர் நகரின் முக்கிய சாலையான குமரன் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், நகரப் பகுதி முழுவதும் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமமடைந்தனர்.



Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...