பேருந்து சேவை தொடக்க விழாவிற்கு தாமதமாக வந்த அமைச்சர் : பயணிகள் அதிருப்தி

கோவை: புதிய பேருந்து சேவைகளின் தொடக்க விழாவிற்கு தாமதமாக வந்ததால், உக்கடம் பேருந்து நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள் அமைச்சர் மீது அதிருப்தியடைந்தனர்.


கோவை: புதிய பேருந்து சேவைகளின் தொடக்க விழாவிற்கு தாமதமாக வந்ததால், உக்கடம் பேருந்து நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள் அமைச்சர் மீது அதிருப்தியடைந்தனர். 



கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து இன்று 25 புதிய பேருந்து தொடங்கி வைக்கும் விழா நடைபெற்றது. ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைசார் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இவ்விழா நடைபெற்றது. காலை 10 மணிக்கு விழா நடைபெறும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்ட நிலையில், அதிகாரிகள், மக்கள், கட்சி தொண்டர்கள் மற்றும் பயணிகள் என பல்வேறு தரப்பினரும் 10 மணிக்கே குவியத் தொடங்கினர். அதன்பின், சட்டமன்ற உறுப்பினர்களும் வந்துவிட்ட நிலையில், அமைச்சர் மதியம் 12.45 மணிக்கு வந்தார். 



அமைச்சர் வருகையையொட்டி 3 மணி நேரத்திற்கும் மேலாக அனைவரும் காத்திருந்தனர். பயணிகளும் புதிய பேருந்துகளில் பயணிக்க ஆர்வமுடன் காத்திருந்த நிலையில் பலமணி நேரம் ஆனதால் கடுப்பாகினர்.

இது குறித்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒருவர் கூறுகையில், "அமைச்சர் அவர்களுக்கு நிறையப் பணிகள் இருக்கும். அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால், நேரம் ஒன்று நிகழ்ச்சிக்கு ஒதுக்கப்படும் நிலையில், அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அவர் தாமதமாக தான் வருகிறார்," என்றார்.

பயணி ஒருவர் கூறுகையில், "3 மணி நேரமாக புதிய பேருந்தில் பயணிக்கலாம் என காத்திருந்தேன். அமைச்சர் வருகையில் தாமதம்தான் இதற்கு காரணம் என்றார். உக்கடம் பேருந்து நிலையத்தின் உள்ளே இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், சில நகர பேருந்துகள் பல மணி நேரம் பயணிகளை வெளியே நிறுத்தி தான் ஏற்று சென்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...