ஸ்டெர்லிங் பயோடெக் தொழிற்சாலைக்கு மின் இணைப்பு வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

நீலகிரி : உதகையில் அமைந்துள்ள ஸ்டெர்லிங் பயோடெக் தொழிற்சாலைக்கு மீண்டும் மின் இணைப்பை வழங்கக்கோரி ஸ்டெர்லிங் பயோடெக் தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீலகிரி : உதகையில் அமைந்துள்ள ஸ்டெர்லிங் பயோடெக் தொழிற்சாலைக்கு மீண்டும் மின் இணைப்பை வழங்கக்கோரி ஸ்டெர்லிங் பயோடெக் தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த சாண்டிநல்லா பகுதியில் கடந்த 45 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஸ்டெர்லிங் பயோடெக் தொழிற்சாலையில் மருத்துவத்திற்கு தேவையான மூலப்பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில். இத்தொழிற்சாலையில் இருந்து சுத்திகரிக்கப்படாத ரசாயனம் கலந்த கழிவு நீர் பைக்காரா அணையில் கலந்து வந்தது. இதனால். பைக்காரா குடிநீர் திட்டத்தின் கீழ், அந்த நீரை குடிநீராகப் பயன்படுத்த முடியாமலும், மீறிப் பயன்படுத்தினால் பொதுமக்களுக்கு நோய் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மாசு கட்டுப்பாட்டு வாரியம் பலமுறை இந்தத் தொழிற்சாலைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால், அதன் மீது எந்தவித நடவடிக்கையும் தொழிற்சாலை நிர்வாகம் எடுக்காததால் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 28-ம் தேதி தொழிற்சாலையின் மின் இணைப்பு துண்டித்து நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில், இத்தொழிற்சாலை நிர்வாகம் எந்தவொரு அறிவிப்பும் இன்றி தொழிலாளர்களை வெளியேற்றி உள்ளதால் சுமார் 400 தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருவதாகக் கோரி இன்று உதகை ஏ.டி.சி., சுதந்திர திடல் முன்பு ஸ்டெர்லிங் பயோடெக் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...