குளத்தில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

திருப்பூர்: திருப்பூர் அருகே நீச்சல் தெரியாமல் குளத்தில் குளிக்க சென்ற இரண்டு பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பூர்: திருப்பூர் அருகே நீச்சல் தெரியாமல் குளத்தில் குளிக்க சென்ற இரண்டு பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

குமாரனந்தபுரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் பகுதிநேர ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் கௌதமன் என்பவர் மகன் திலிபன் (17). இவர், தாராபுரத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று வந்தார். அதேபகுதியில், வசிக்கும் லாரி ஓட்டுநர் நல்லதம்பி என்பவரது மகன் பரத் (12) அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு பயின்று வந்தார். 

விடுமுறை தினமான இன்று திலிபன், பரத் இருவரும் நண்பர்களுடன் சேர்ந்து மாணிக்காபுரம் குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாக நால்வரும் நீரினுள் இழுக்கப்பட்டுள்ளனர். இதில், பயந்து போன சிறுவர்கள் அலறியுள்ளனர். அவர்ளது சத்தத்தைக் கேட்ட அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் குளத்தில் குதித்து இரண்டு சிறுவர்களை காப்பாற்றினர். ஆனால், அதற்குள் திலிபனும், பரத்தும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதனையடுத்து, விரைந்து வந்த திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறையினர் இருவரின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஊத்துக்குளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...