பவானியாற்றில் இரவு நேரத்தில் சிக்கி கொண்ட கல்லூரி மாணவர்கள்: போராடி மீட்டது தீயணைப்புத்துறை

கோவை: பவானியாற்றில் இரவு நேரத்தில் சிக்கித்தவித்த பதினோரு கல்லூரி மாணவர்களை தீயணைப்புத்துறையினர் போராடி மீட்டனர்.

கோவை: பவானியாற்றில் இரவு நேரத்தில் சிக்கித்தவித்த பதினோரு கல்லூரி மாணவர்களை தீயணைப்புத்துறையினர் போராடி மீட்டனர்.



கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டி என்னும் பகுதியில் பவானியாற்றில் நேற்று குளிக்க சென்ற தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் பதினோரு பேர், ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக சுழலில் சிக்கி ஆற்றின் மறு கரையில் கரையேறியுள்ளனர். 

ஆற்றின் வேகம் அதிகரித்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பல மணி நேரமாக ஆற்றைக்கடந்து வர இயலாமல் போராடினர். நேரம் ஆக-ஆக இருள் சூழ தொடங்கியதால் அச்சத்தில் ஆழ்ந்த மாணவர்கள் பலத்த சப்தம் எழுப்பியும், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தும் உதவி கோரினர். 

இது குறித்து தகவலறிந்த மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் மாணவர்களை பத்திரமாக மீட்கும் முயற்சியில் இறங்கினர். 

மாணவர்கள் இருந்த ஆற்றின் மறுகரை வனப்பகுதி என்பதாலும், இருள் சூழ்ந்த பின்னர் யானைகள் அங்கு நீர் அருந்த வந்ததாலும் அவர்களை மீட்பு படையினர், உள்ளூர் மக்களின் உதவியோடு மீட்க முடிவெடுத்தனர். ஆற்றின் வேகம் ஓரளவு குறைந்தவுடன் பரிசலின் உதவியோடு பிரவீன், கிள்ளிவளவன், முத்துகிருஷ்ணன், விவேக், கார்த்தி, இளமாறன், லெனின், அஜய்பிரவீன், தினேஷ்ராஜ், பிரனிஸ், ராஜ்குமார் என்ற பதினோரு மாணவர்களையும் இரவு பத்து மணியளவில் பத்திரமாக மீட்டனர். 



பில்லூர் அணையில் இருந்து மின் உற்பத்திக்காக பவானியாற்றில் தண்ணீர் திறந்து விடப்படும் போது தீடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும், அணையின் நீர் திறக்கப்படும் முன் உரிய முன்னெச்சரிக்கை அறிவிப்பு இல்லாத காரணத்தினால் இது போன்ற சம்பவங்கள் ஏற்படுவதாக உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...