"மிஸ் போகாதீங்க மிஸ்": மீண்டும் ஒரு பாசப்போராட்டம் நடத்திய பள்ளி குழந்தைகள்

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியை இசபெல்லா ஜூலியின் இடமாற்றத்தை எதிர்த்து அந்த அப்பள்ளி மாணவர்கள் அழுது பாச போராட்டத்தை நடத்தினர்.

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியை இசபெல்லா ஜூலியின் இடமாற்றத்தை எதிர்த்து அந்த அப்பள்ளி மாணவர்கள் அழுது பாச போராட்டத்தை நடத்தினர்.

சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியகரம் பகுதி அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் பகவான் இடமாற்றத்தைக் கண்டித்து பள்ளி மாணவர்கள் அவரை சூழ்ந்து கொண்டு, அழுது அவரை வெளியேற விடாமல் பாசப்போராட்டம் நடத்தினர்.

இதே போன்ற சம்பவம் தற்போது நாக்கை மாவட்டத்திலும் நடைபெற்றுள்ளது.

பொய்கைநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 4 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் இங்கு பணியாற்றி வரும் இசபெல்லா ஜூலி என்ற ஆசிரியை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்ய மாவட்ட கல்வி அலுவலகம் உத்தரவிட்டது.

இந்த இடமாற்றத்துக்கு பள்ளி மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பெற்றோர்களுடன் இணைந்து திடீர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தில் ஆசிரியர் குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியும் போராட்டம் நடத்தினர்.

இதே பள்ளியில் அவர் தொடர வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்த மாணவர்கள் ஆசிரியையை சூழ்ந்து கொண்டு, "மிஸ் போகாதீங்க மிஸ்" என்று கூறி கதறி அழுதனர். இதைப் பார்த்த அந்த ஆசிரியையும் கண்ணீர் சிந்தினார்.

இந்த சூழலில், இசபெல்லா ஜூலி அதே பள்ளியில் சில காலத்துக்கு தொடருவார் என்ற வாய்மொழி உத்தரவை அம்மாவட்ட கல்வி அலுவலகம் பிறப்பித்துள்ளது.

மாணவர்களின் இந்த பாசப் போராட்டம் அப்பள்ளி ஆசியர்களையும், ஊர் மக்களையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...