தானிய வகைகளை அரசே கொள்முதல் செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

கோவை: சிறுதானியம் உற்பத்தி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க தானிய வகைகளை அரசே கொள்முதல் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

கோவை: சிறுதானியம் உற்பத்தி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க தானிய வகைகளை அரசே கொள்முதல் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

கோவை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் சிறு தானிய உற்பத்தி என்பது குறைந்துள்ளது. மேலும், மானாவாரி பயிராகவும், ஊடு பயிராகவும் விவசாயிகள் தானிய உற்பத்தி செய்து வந்தனர். இவ்வாறு விளைவிக்கும் சிறு தானியங்களான ராகி, சோளம், கம்பு, மக்காச்சோளம், அவரை, துவரை ஆகியவற்றிற்கு தற்போது உரிய லாபம் கிடைக்காததால் விவசாயிகள், வேதனையடைந்துள்ளனர்.



இதனால், சிறுதானியங்கள் உற்பத்தியை விவசாயிகள் கைவிடும் சூழல் உள்ள நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிறுதானிய உற்பத்தி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

மாவட்ட தலைவர் பழனிச்சாமி தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் மக்காச்சோளம், கம்பு, சோளம் ஆகிய செடிகளுடன் ஆட்சியர் அலுவலகம் வந்து மனு அளித்தனர். அதில் சிறுதானியம் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் வட்டியில்லாக் கடன் 50 ஆயிரம் வழங்க வேண்டும், விளைவிக்கும் சிறுதானிய பயிர்களை அரசே கூட்டுறவு சங்கங்கள் மூலம் நேரடியாக கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...