ஊதியம் வழங்காமல் ஏமாற்றிவிட்டதாக வடமாநில தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு

கோவை: கோவை மாவட்டம் அன்னூரில் பணிபுரிந்ததற்கான ஊதியத்தை வழங்காமல் ஏமாற்றியதாக தனியார் நிறுவனத்தின் மீது வடமாநில இளைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை: கோவை மாவட்டம் அன்னூரில் பணிபுரிந்ததற்கான ஊதியத்தை வழங்காமல் ஏமாற்றியதாக தனியார் நிறுவனத்தின் மீது வடமாநில இளைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

அன்னூர் கணேசபுரத்தில் ஸ்ரீவாராகி அம்மன் ஸ்டீல் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு, ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த 43 தொழிலாளிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் ஒப்பந்ததாரர் மூலம் வேலைக்கு சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு ஒப்பந்ததாரர் அவெஹய் ரயுத்ராய் நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்று சம்பளம் வழங்கி வந்துள்ளார். 

இந்நிலையில், கடந்த மே மாதம் 15 நாள் சம்பளமும், ஜீன் மாதம் முழுச் சம்பளமும் வழங்காமல் ஒப்பந்ததாரர் இழுத்தடித்து வந்துள்ளார். தொழிலாளர்கள் சம்பளத்தை நிர்வாகத்திடம் கேட்டால் ஒப்பந்ததாரரிடம் கொடுத்து விட்டதாக தெரிவிப்பதாகவும், ஒப்பந்ததாரர் நிர்வாகம் பணம் கொடுக்கவில்லை என சொல்லி அலைக்கழிப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். மேலும், ஊதியம் கிடைக்காததால் வடமாநில தொழிலாளர்கள் சாப்பிடக் கூட வழியின்றி இருந்து வருவதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.



இதனையடுத்து, உழைப்போர் உரிமை இயக்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் வடமாநில தொழிலாளர்கள் மனு அளித்தனர். வடமாநில தொழிலாளர்களுக்கு சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதியளித்துள்ளதாகவும், நடவடிக்கை எடுக்க வில்லை எனில் அடுத்த கட்டமாக போராட்டம் நடத்துவது குறித்து இன்று மாலை முடிவு செய்ய இருப்பதாவும் உழைப்போர் உரிமை இயக்கத்தினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...