குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம் தொடக்கம்

கோவை: குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்புச்சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தப் பிரச்சார பயணம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தொடங்கியது.


கோவை: குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்புச்சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தப் பிரச்சார பயணம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தொடங்கியது.

கோவை மாவட்ட சமூகநல பாதுகாப்புத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் சார்பாக குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார பயணம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து இன்று தொடங்கியது. 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் உளவியல் மற்றும் உடல் ரீதியாகவும் மற்றும் பாலியல் வன்கொடுமையாலும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். 



குழந்தைகள் பாதிக்கப்பட்டால் குடும்ப கெளரவம், அறியாமை காரணமாக பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளிப்பதில்லை. இதனால் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் மீண்டும் மீண்டும் குற்றத்தில் ஈடுபடுகின்ற சூழல் உருவாகியுள்ளது. குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பவர்களுக்கு போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அதிகபட்ச தண்டனை வழங்கப்படுகிறது.



இச்சட்டம் குறித்து பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகளிடம், தங்களை தாங்களே பாதுகாப்பது, குற்றவாளிகளுக்கான தண்டனை குறித்து நாடகம், பாட்டு, இசை நிகழ்ச்சி மூலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த இருக்கின்றனர். 



3 நாட்கள் நடைபெறும் இப்பிரச்சாரப் பயணம் கோவை மாநகரம் மற்றும் மேட்டுப்பாளையம், காரமடை, பெ.நா.பாளையம், சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் நடக்க உள்ளது. பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆறு பள்ளிகள் மற்றும் இரண்டு கல்லூரியில் பிரச்சார நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக விடியல் சமூக அமைப்பு ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் தெரிவித்தார். மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று அங்கு வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் நிகழ்ச்சியைக் கண்டனர்.



Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...