நீலகிரியில் பரவலான மழை: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் பரவலான மழையினால், சுற்றுலாத்தலங்களைக் கண்டு ரசிக்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் பரவலான மழையினால், சுற்றுலாத்தலங்களைக் கண்டு ரசிக்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.



நீலகிரியில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் இதமான காலநிலையும், இரவு நேரங்களில் மழையும் பெய்து வருகிறது. கேரள மாநிலத்தில் பெய்யும் பருவ மழையின் தாக்கத்தினால் மாநில எல்லையோர பகுதியான நீலகிரி மாவட்டம் இந்த மழைப் பொழிவைப் பெறுகிறது. இந்த சூழலில் தேவாலா பகுதியில் நேற்று 42 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. அதேபோல, அவலாஞ்சியில் 44 மி.மீ., கூடலூரில் 27 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மாவட்டத்தில் 236 மி.மீ., மழை பதிவானது. 



இந்த நிலையில், கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் பெய்த மழை, இன்று மாலை நேரம் முதல் பெய்ய தொடங்கியுள்ளது. இதனால், குளிரின் தாக்கமும் அதிகரித்துக் காணப்படுகிறது. மேலும், வெளியூர்களில் இருந்து வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், விடுதிகளிலேயே முடங்கிக் கிடக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. 



Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...