அச்சம் வேண்டாம்; கோவையில் விற்பனையாகும் மீன்களில் எந்த ரசாயனமும் இல்லை - ஆய்வுக்குப்பின் அதிகாரிகள் உறுதி

கோவை: கோவையில் விற்பனையாகும் மீன்களில் எந்த ரசாயனமும் இல்லை என்று உக்கடம் மீன்மார்க்கெட் பகுதியில் நடத்திய ஆய்வுக்குப்பின் மீன் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் விற்பனையாகும் மீன்களில் எந்த ரசாயனமும் இல்லை என்று உக்கடம் மீன்மார்க்கெட் பகுதியில் நடத்திய ஆய்வுக்குப்பின் மீன் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் மீன் வளத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் அங்கு விற்பனையாகும் மீன்களில் புற்றுநோயை உண்டாக்கும் ஃபார்மலின் வேதிப்பொருள் கலந்து விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் இன்று உக்கடம் மீன் மார்க்கெட் சில்லறை விற்பனை நிலையத்தில் மீன் வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள 64 கடைகளில் 45 கடைகள் மீன்கள் விற்பனைக்கென்றே பிரத்தியேகமாக செயல்படுபவை.



அங்கு மீன்கள் சுகாதாரமாக விற்பனை செய்யப்படுகிறதா? ரசாயனம் உபயோகிக்கப்பட்டுள்ளதா? என்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் அடிப்படையில் அங்கு விற்பனையாகும் மீன்கள் சுத்தமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மீன் வளத்துறை உதவி இயக்குனர் கொளஞ்சிநாதன் கூறுகையில், "மீன் விற்பனையாளர்களுக்கு அரசாங்கம் சார்பில் அறிவிக்கப்படும் மானியங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. அதன் பின் ஆய்வு மேற்கொண்டதில் மீன்களில் எந்த விதமான ரசாயன பொருட்களும் கலக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. மேலும், மீன் விற்பனையாளர்களிடம் மீன் விற்பனை குறித்த யுத்திகளும் எடுத்துரைக்கப்பட்டது." என்றார்.



இது குறித்து, உக்கடம் மீன் மார்க்கெட் சங்க தலைவர் H.S. பாவா கூறுகையில், "இங்கு தரமான மீன்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றது. கடற்கரையில் இருந்து மீன்கள் வரும் போதே வியாபாரிகளிடம் எச்சரிக்கை செய்யப்படுகின்றது. ஒருவேளை அவர்கள் ரசாயனம் கலந்த மீன்கள் கொடுத்தால் அது திருப்பி அனுப்பப்படும்." என்றார்.



இந்த ஆய்வின் போது மீன் மார்க்கெட் செயலாளர் காதர், மற்றும் மீன் வளத்துறை ஆய்வாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...