மேட்டுப்பாளையம் வன பத்திரகாளியம்மன் கோவில் ஆடி குண்டம் திருவிழா தொடக்கம்: தயார் நிலையில் அடிப்படை வசதிகள்

கோவை: மேட்டுப்பாளையம் வன பத்திரகாளியம்மன் கோவிலில் குண்டம் கண் திறப்பு நிகழ்ச்சியுடன் ஆடி குண்டம் திருவிழா இன்று தொடங்கியது.

கோவை: மேட்டுப்பாளையம் வன பத்திரகாளியம்மன் கோவிலில் குண்டம் கண் திறப்பு நிகழ்ச்சியுடன் ஆடி குண்டம் திருவிழா இன்று தொடங்கியது.

கோவை மாவட்டத்தின் பிரசித்திபெற்ற அம்மன் திருத்தலமான மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி அருள்மிகு வன பத்திரகாளியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி குண்டம் விழா நடைபெறுவது வழக்கம்.

இக்கோவிலின் 27-ம் ஆண்டு ஆடி குண்டம் திருவிழாவிற்கான குண்டம் கண் திறப்பு நிகழ்ச்சி இன்று தொடங்கியது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே பவானி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்துவரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டன. அப்போது, அம்மன் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

குண்டம்

கோவில் முன்பு சுமார் 36 அடி நீளத்தில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் குண்டம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குண்டத்தினை பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தலைமை பூசாரி பரமேஸ்வரன் குண்டத்தினை சுற்றி வலம் வந்து சிறப்பு பூஜைகள் செய்து மேள தாளம் முழங்க குண்டத்தினை கண் திறந்து, ஆடி குண்ட திருவிழா நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.



இதனையடுத்து, 15 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் இருந்து சுமார் ஜம்பதாரயித்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் சிறப்பு பேருந்து வசதிகள், குடிநீர், சுகாதார வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் என அனைத்தும் செய்யப்பட்டு வருவதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...