நடப்பு ஆண்டில் முதன் முறையாக நிறைந்து வழியும் சிறுவாணி அணை

கோவை: கோவை மக்களுக்கு முக்கிய நீராதாரமாக விளங்கும் சிறுவாணி அணை நடப்பு ஆண்டில் முதன் முறையாக நிறைந்து வழிகிறது.


கோவை: கோவை மக்களுக்கு முக்கிய நீராதாரமாக விளங்கும் சிறுவாணி அணை நடப்பு ஆண்டில் முதன் முறையாக நிறைந்து வழிகிறது. 



மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில், கடந்த மே, ஜூன் மாதங்களிலும், தென் மேற்கு பருவ மழையின் போதும் எதிர்பார்த்ததை விட கூடுதலான மழை பெய்தது. இதனால் கோவையைச் சுற்றியுள்ள நீராதாரங்கள் நிரம்பின.

கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையும் கடந்த 2-ம் தேதி அதன் முழு கொள்ளளவான 50 அடியை எட்டியது. இன்னும் பத்து நாட்களில் அணை நிரம்பி வழியும் என்று அன்றே அதிகாரிகள் தெரிவித்தனர்.



இந்த சூழலில், சிறுவாணி அணைக்கு நேற்று முதல் நீர்வரத்து அதிகரித்தது. இன்று காலை 10 மணியளவில் அணை அதன் முழு கொள்ளளவையும் தாண்டி நிரம்பி வழிந்தது. 

இதன் மூலமாக, அடுத்த 6 மாதங்களுக்கு கோவை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. சிறுவாணி அணையானது கடந்த 2014-ம் ஆண்டுக்கு பின் தற்போது நிரம்பி வழிவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள நீர், பில்லூர் அணைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...