கோவை - சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை 13 மற்றும் 14-ம் தேதிகளில் ரத்து

கோவை: பொறியியல் பணிகள் காரணமாக வரும் 13 மற்றும் 14-ம் தேதிகளில் கோவை - சேலம் எக்ஸ்பிரஸ் ரயிலின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.



கோவை: பொறியியல் பணிகள் காரணமாக வரும் 13 மற்றும் 14-ம் தேதிகளில் கோவை - சேலம் எக்ஸ்பிரஸ் ரயிலின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

கோவை - திருப்பூர் இடையிலான வஞ்சிபாளையம் ரயில்நிலையத்தில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், வரும் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் சேலம் வழியாக இயங்கும் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. மேலும், கோவை - சேலம் ரயில் வரும் 13 மற்றும் 14-ம் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. 

வரும் 14-ம் தேதி தாமதமாக இயக்கப்படும் ரயில்கள்: 

அலப்பி - டாடா/தன்பாத் எக்ஸ்பிரஸ், கோவையில் சுமார் 60 நிமிடங்கள் நிறுத்தப்படும். அதாவது, நண்பகல் 12 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த ரயில், மதியம் 1 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும்.

எர்ணாகுளம் - கே.ஆர்.எஸ்., பெங்களூரூ எக்ஸ்பிரஸ் ரயில், கோவையில் சுமார் 30 நிமிடங்கள் நிறுத்தப்படும். அதாவது, மதியம் 12.50 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த ரயில், மதியம் 1.20 மணிக்கு புறப்படும். 

கோவை - சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதாவது, மதியம் 2.55 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில், 70 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.

கோவை - சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 80 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. மதியம் 03.25 மணிக்கு கிளம்ப வேண்டிய ரயில், மாலை 04.45 மணிக்கு புறப்படுகிறது. 

கே.ஆர்.எஸ்., பெங்களூரூ - எர்ணாகுளம் ரயில் நிலையம் எக்ஸ்பிரஸ் ரயில் ஓமலூர் ரயில் நிறுத்தத்தில் 15 நிமிடங்களும், சேலத்தில் 30 நிமிடங்களும், சங்கரி துர்க்கில் 15 நிமிடங்களும், ஈரோடு ரயில் நிலையத்தில் 40 நிமிடங்கள் நிறுத்தப்படும். 

சென்னை சென்ட்ரல் கோயம்புத்தூர் கோவை எக்ஸ்பிரஸ் சுமார் 30 நிமிடங்கள் ஜோலார்பேட்டையிலும், 10 நிமிடங்கள் மொரப்பூரிலும், 30 நிமிடங்கள் சேலத்திலும், 20 நிமிடங்கள் ஈரோடு ரயில் நிலையத்திலும் நிறுத்தப்படும். 

சென்னை சென்ட்ரல் கோயம்புத்தூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 30 நிமிடங்கள் ஜோலார்பேட்டையிலும், 10 நிமிடங்கள் மொரப்பூரிலும், 20 நிமிடங்கள் சேலத்திலும், 20 நிமிடங்கள் ஈரோடு ரயில் நிலையத்திலும் நிறுத்தப்படும். 

இதேபோல, வரும் 13-ம் தேதி தாமதமாக இயக்கப்படும் ரயில்கள் : 

கோவை - சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ் ரயில், 1.40 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும். அதாவது, கோவையில் பிற்பகல் 02.55 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த ரயில், மாலை 04.35 மணிக்கு இயக்கப்படுகிறது. 

கோவை - சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ், சுமார் 1.30 மணி நேரம் தாமதமாக கோவையில் இருந்து கிளம்புகிறது. மதியம் 03.33 மணிக்குப் புறப்பட வேண்டிய இந்த ரயில், மாலை 05.03 மணிக்கு புறப்படுகிறது. 

எர்ணாகுளம் ரயில்நிலையம்- பரௌனி ரயில்நிலையம் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில், 1.30 மணி நேரம் தாமதமாக புறப்படுகிறது. பிற்பகல் 03.33 மணிக்கு கிளம்ப வேண்டிய இந்த ரயில், மாலை 05.03 மணிக்கு இயக்கப்படுகிறது.

மங்களூரூ ரயில்நிலையம் - சென்னை எழும்பூர் ரயிலின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதாவது, பிற்பகல் 03.40 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட வேண்டிய இந்த ரயில், 1.10 மணி நேரம் தாமதமாக, மாலை 04.50 மணிக்கு கிளம்புகிறது. 

திருவனந்தபுரம் - ஐதரபாத் சபரி எக்ஸ்பிரஸ் ரயில் கோவையில் இருந்து 35 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. மாலை 04.35 புறப்பட வேண்டிய இந்த ரயில், 05.10 மணிக்கு செல்கிறது. 

பாலக்காடு டவுன் - ஈரோடு பயணிகள் ரயில் வஞ்சிப்பாளையத்தில் 35 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு இயக்கப்படும். இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

Newsletter

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...