பிளீச்சிங் கழிவுகளால் நுரையுடன் பாயும் நொய்யல்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கோவை: நொய்யல் ஆற்றில் பிளீச்சிங் கழிவுகள் கலப்பதால் தற்போது ஆற்று நீர் நுரை பொங்க பாய்ந்து வருகிறது.


கோவை: நொய்யல் ஆற்றில் பிளீச்சிங் கழிவுகள் கலப்பதால் தற்போது ஆற்று நீர் நுரை பொங்க பாய்ந்து வருகிறது.

நீண்ட நாட்களுக்குப் பின் உயிர்த்தெழுந்த நொய்யல் ஆற்றில் தற்போது கலக்கப்படும் கழிகளினால் நுரை பொங்கிவருவது இயற்கை ஆர்வலர்களையும் விவசாயிகளையும் வேதனையடையச் செய்துள்ளது. 

இது குறித்து கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த மணிகண்டன் கூறுகையில், "புட்டுவிக்கி குளம் அருகே பிளீச்சிங் கம்பெனி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் காரணமாகவே தற்போது நொய்யலில் நுரை பொங்கி வருகிறது.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் இரண்டு முறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. முன்பைவிட தற்போது அதிக அளவில் நுரை பொங்கி வருகிறது. இதனால் அதிகபட்ச அளவில் கழிவு நீர் கலந்திருப்பதாக சந்தேகம் எழுகிறது. உடனடியாக இந்த பிரச்சினைக்கு அதிகாரிகள் தீர்வு காண வேண்டும்." என்றார்.

மேலும், சொட்டையாண்டி குட்டை, கங்கநாராயண சமுத்திரம், பேரூர் பெரியகுளம் மற்றும் செங்குளம் ஆகிய குளங்களில் இருந்து வரும் நீர் குனியமுத்தூர் வாய்க்காலில் நுழையாமல் தடுக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தொடர்பு கொள்ள முயன்ற போது, அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...