குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் 12-வது கொண்டை ஊசி வளைவில் லாரி கவிழ்ந்து விபத்து

நீலகிரி: குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள 12-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயற்சித்த போது லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.


நீலகிரி: குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள 12-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயற்சித்த போது லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இன்று காலை 10 மணியளவில் நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மரப்பாலம் அருகே சென்னையில் இருந்து ஊட்டிக்கு புல் கட்டுகள் ஏற்றி வந்த லாரி 12-வது கொண்டை ஊசி வளைவில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.



இந்த விபத்தில், லாரியில் இருந்த ஓட்டுனர் மற்றும் கிளீனர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் பாதிப்பு ஏற்பட்டது.

இதனால், அவ்வழியாகச் சென்ற அனைத்து வாகனங்களும் கோத்தகிரி-ஊட்டி சாலை வழியாக திருப்பி விட்டனர். சம்பவம் குறித்து தகவலறிந்த மீட்பு படையினர், தற்போது லாரியை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக மழை பெய்து வரும் சூழலில் அங்கு அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் வாகனங்களை இயக்குமாறு போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...