அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய பொதுக்கழிப்பறையை பார்வையிட்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோவை: கோவை மகளிர் பாலிடெக்னிக் அருகே அதிநவீன வசதிகளுடன் இலவச பொதுக் கழிப்பிடம் கட்டும் பணிகள் முடிவுற்றுள்ளதையடுத்து, அதனை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை: கோவை மகளிர் பாலிடெக்னிக் அருகே அதிநவீன வசதிகளுடன் இலவச பொதுக் கழிப்பிடம் கட்டும் பணிகள் முடிவுற்றுள்ளதையடுத்து, அதனை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், பாலசுந்தரம் செட்டியார் சாலை மகளிர் பாலிடெக்னிக் அருகில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.98 லட்சம் மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் இலவச பொதுக் கழிப்பிடம் கட்டும் பணிகள் முடிவுற்றுள்ளது. இந்த நவீன பொதுக்கழிப்பிடத்தின் பணிகள் முடிவுற்றுள்ளதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



நவீன பொதுக் கழிப்பிடத்தில் ஆண்கள், பெண்களுக்கான தனித்தனி குளியலறைகள், கழிப்பறைகள் மற்றும் கை கழிவுமிடங்களில் தண்ணீர் வசதிகள், மின் விளக்குகள் சரியாக செய்யப்பட்டுள்ளதையும், நவீன கழிப்பிடத்தின் வளாகத்தில் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருவதையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது துணை ஆணையாளர் ப.காந்திமதி, உதவி ஆணையாளர் கே.ரவிக்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...