கோவை கல்லூரியில் நடந்த தேசிய பேரிடர் பயிற்சிக்கும், எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை: பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல்

கோவை: கோவையில் உள்ள கலைமகள் கல்லூரியில் நடைபெற்ற தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சிக்கும், தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.



கோவை: கோவையில் உள்ள கலைமகள் கல்லூரியில் நடைபெற்ற தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சிக்கும், தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. 

கோவை அருகே தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு கலைமகள் கல்லூரியில் நேற்று பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக, கல்லூரி கட்டிடத்தின் 2-வது மாடியில் இருந்து கீழே குதிக்கவும், அவர்களை வலை மூலம் பிடித்து காப்பாற்றுவதற்கும் மாணவிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது, பயிற்சியாளர் பிடித்து தள்ளியதில், 2-வது மாடியில் இருந்து குதித்த மாணவி லோகேஸ்வரி, முதல் மாடியில் உள்ள ஸ்லாப்பில் அடிபட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளார். 

கல்லூரியில் நடந்த பயிற்சி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பாக நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அத்தகைய பயிற்சியை தாங்கள் நடத்தவில்லை என பேரிடர் மேலாண்மை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து பேரிடர் மேலாண்மை ஆணையம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் :- கோவையில் மாணவி பலியான செய்தியுடன் தங்கள் கருத்தைப் பதிவு செய்துள்ளது. நடந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. ஒரு உயிரை இழந்திருக்கிறோம். உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதேசமயம், கோவை கல்லூரியில் நடந்த பேரிடர் பயிற்சிக்கும். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அங்கு பயிற்சி அளித்தவர் எங்களிடம் முறையாகப் பயிற்சி பெற்றவர் இல்லை, இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...