கோவை - பொள்ளாச்சி இடையிலான அரசு பேருந்துகளில் கட்டணம் அதிகரித்து வசூலிப்பதாகப் புகார்

கோவை: கோவையில் இருந்து பொள்ளாச்சி வரை இயக்கப்படும் அரசு பேருந்துகளில் ரூ. 3 கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கோவை: கோவையில் இருந்து பொள்ளாச்சி வரை இயக்கப்படும் அரசு பேருந்துகளில் ரூ. 3 கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

உக்கடம் - ஆத்துபாலம் இடையே மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதால் அரசு, தனியார் மற்றும் கல்லூரி பேருந்துகள் அனைத்தும் ஒரு வழிப்பாதையாக இயக்கப்பட்டு வருகிறது. ஆத்துபாலத்திலிருந்து புட்டு விக்கி லேக், செல்வபுரம், மீன்மார்க்கெட் வழியாக உக்கடம் பேருந்து நிலையம் வர உத்தரவிடப்பட்டுள்ளது. உக்கடத்திலிருந்து ஆத்துபாலம் செல்ல வழக்கம் போல் கரும்புக்கடை வழியே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, ஆத்துப்பாலத்திலிருந்து உக்கடம் பேருந்து நிலையம் வர வழிமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் சுமார் 5 கி.மீ., தூரம் வரை சுற்றி வர வேண்டிய சூழ்நிலையுள்ளது. இதனைப் பயன்படுத்தி பயணிகளிடம் அரசுப் பேருந்து நிர்வாகம் ரூ. 3 கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. கோவை - பொள்ளாச்சி இடையே சாதாரண கட்டணமாக ரூ. 25-ம், எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் ரூ. 33-ம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சாதாரண பேருந்துகளில் ரூ. 28 வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கட்டண உயர்வு குறித்து பொள்ளாச்சி செல்லும் பயணிகள் நம்மிடம் கூறுகையில், "வியாழக்கிழமை கட்டண உயர்வு இருந்தது. இன்று அது இல்லை. அதேசமயம், சில பேருந்துகளில் மட்டும் இந்தக் கட்டண உயர்வு உள்ளது. தனியார் பேருந்துகளில் இது இல்லை," எனக் கூறினர். 

இது குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரியிடம் கேட்ட போது, பேருந்துகளில் கட்டண உயர்வு ஏற்றப்படவில்லை, என்றார்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...