பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தினத்தையொட்டி தோல் கொடையாளிகளுக்கு பாராட்டு விழா

கோவை: தேசிய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தினத்தையொட்டி வரும் 15-ம் தேதி கங்கா மருத்துவமனையின் சார்பில் தோல் கொடையாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை: தேசிய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தினத்தையொட்டி வரும் 15-ம் தேதி கங்கா மருத்துவமனையின் சார்பில் தோல் கொடையாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் தீக்காயங்களால் பாதிக்கப்படுபவர்களுக்காகவே, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சையின் மூலம் அவர்கள் மீண்டும் தங்களது இயல்பான வாழ்க்கைக்குத் திரும்புகின்றனர். உடலில் 30 சதவீதத்திற்கும் மேற்பட்ட தீக்காயங்கள் ஏற்படுபவர்களுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை அவசியமாகிறது. இதற்காக, இரத்த வங்கிகளைப் போலவே, தோல் வங்கி (Skin Bank) தேவைப்படுகிறது. அந்த வகையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கங்கா மருத்துவமனையில் தோல் வங்கி அறிமுகப்படுத்தப்பட்டது. 

இது குறித்து தீக்காயங்களுக்கான மைக்ரோ பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைத்துறை மருத்துவர் ராஜா சபாபதி கூறுகையில், " ஒருவர் உயிரிழந்தவரிடத்தில் இருந்து 6 மணிநேரத்தில் தோலை தானமாகப் பெற வேண்டும். மேலும், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தோல் தானம் செய்யலாம். கண்தானம் செய்யும் ஒவ்வொருவரும், தோல் தானம் செய்யலாம்," என்றார். 

இதுவரை 150-க்கும் மேற்பட்ட தோல் கொடையாளிகள் இருப்பதாகவும், தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான தோல் வங்கியாக கங்கா மருத்துவமனை செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. புதுடெல்லி, மணிப்பால், ஜாம்ஷெட்பூர் மற்றும் பெங்களூரூ போன்ற நகரங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு தோல்களை அனுப்பப்பட்டுள்ளது. 

தோல் தானம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் ஜுலை 15-ம் தேதி 'தேசிய பிளாஸ்டிக் தினம்' அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, தோல் கொடையாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை பாராட்டும் விழா கங்கா மருத்துவமனையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கங்கா மருத்துவமனையின் அரங்கில் 15-ம் தேதி காலை 11 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடக்கிறது. 

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...