வரும் 17-ம் தேதி முதல் திருப்பூர் - கோவை இடையிலான ரயில் சேவையில் மாற்றம்

கோவை: கோவை - திருப்பூர் இடையே பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் வரும் 17-ம் தேதி முதல் ஆகஸ்ட் 4-ம் தேதி வரையிலான ரயில் சேவைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

கோவை: கோவை - திருப்பூர் இடையே பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் வரும் 17-ம் தேதி முதல் ஆகஸ்ட் 4-ம் தேதி வரையிலான ரயில் சேவைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்:- 17, 23, 26 ஆக., 02 மற்றும் ஆக., 04 ஆகிய தேதிகளில் சேலம்-கோவை பயணிகள் ரயில் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. மேலும், வரும் 17-ம் தேதி கோவை - சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் - கே.எஸ்.ஆர்., பெங்களூரூ இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் - கோரக்பூர் ரப்திசாகர் எக்ஸ்பிரஸ், மங்களூரூ சென்ட்ரல் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் - ஐதராபாத் சபரி எக்ஸ்பிரஸ், பாலக்காடு டவுன் - ஈரோடு பயணிகள் ரயில் ஆகிய ரயில்கள் சூலூர் ரயில் நிறுத்தத்தில் 15 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும். 

அலப்புழா - டாடா/தன்பாத் எக்ஸ்பிரஸ் கோவையில் 01.25 மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும். கோவையில் இருந்து நண்பகல் 12 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த ரயில், 01.25 மணிக்கு கிளம்பும். 

எர்ணாகுளம் - கே.எஸ்.ஆர்., பெங்களூரூ எக்ஸ்பிரஸ் கோவையில் சுமார் 45 நிமிடங்கள் நிறுத்தப்படும். அதன்படி, மதியம் 12.50 மணிக்கு கிளம்ப வேண்டிய இந்த ரயில், 01.35 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும். 

மேலும், வரும் 19-ம் தேதி மங்களூரூ ரயில்நிறுத்தம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், டாடா/தன்பாத் - அலப்புழா எக்ஸ்பிரஸ், ஐதராபாத் - எர்ணாகுளம் சிறப்பு ரயில், ஷாலிமார் - திருவனந்தபுரம், கே.எஸ்.ஆர்., பெங்களூரூ - எர்ணாகுளம், சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல் கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் சூலூர் ரயில் நிறுத்தத்தில் 15 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும். 

இதேபோல, வரும் 23-ம் தேதி தாமதமாக இயக்கப்படும் ரயில்கள் : கோவை - சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ், கோவை - சென்னை சென்ட்ரல் கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் - கோர்பா, மங்களூரூ சென்ட்ரல் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் - ஐதராபாத் சபரி எக்ஸ்பிரஸ், பாலக்காடு டவுன் - ஈரோடு பயணிகள் ரயில் ஆகியவை இருகூர் ரயில் நிறுத்தத்தில் இருந்து 15 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.

26-ம் தேதி ஜெய்ப்பூர்- கோவை அதிவிரைவு எக்ஸ்பிரஸ், ஈரோடு ரயில்நிறுத்தத்தில் சுமார் 30 நிமிடங்கள் நிறுத்தப்படும். இதேபோல, கோவை - சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ், கோவை சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் - கோர்பா, மங்களூரூ சென்ட்ரல் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் - ஐதராபாத் சபரி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் சுமார் 15 நிமிடங்கள் இருகூர் ரயில் நிறுத்தத்தில் இருந்து தாமதமாக இயக்கப்படும். 

வரும் 28-ம் தேதி தாமதமாக இயக்கப்படும் ரயில்கள்:-

அலப்புழா - டாடா/தன்பாத் எக்ஸ்பிரஸ் கோவையில் 01.10 மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும். கோவையில் இருந்து நண்பகல் 12 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த ரயில், 01.10 மணிக்கு கிளம்பும்.

எர்ணாகுளம் - கே.எஸ்.ஆர்., பெங்களூரூ எக்ஸ்பிரஸ் கோவையில் சுமார் 35 நிமிடங்கள் நிறுத்தப்படும். அதன்படி, மதியம் 12.50 மணிக்கு கிளம்ப வேண்டிய இந்த ரயில், 01.25 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும். 

இதேபோல, மங்களூரூ சென்ட்ரல் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், டாடா/தன்பாத் - அலப்புழா எக்ஸ்பிரஸ், பாட்னா - எர்ணாகுளம், கே.எஸ்.ஆர்., பெங்களூரூ - எர்ணாகுளம், சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் சுமார் 15 நிமிடங்கள் இருகூர் ரயில் நிறுத்தத்தில் நிறுத்தி வைக்கப்படும்.

30-ம் தேதி தாமதமாக இயக்கப்படும் ரயில்கள்:

அலப்புழா - டாடா/தன்பாத் எக்ஸ்பிரஸ் கோவையில் 01.10 மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும். கோவையில் இருந்து நண்பகல் 12 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த ரயில், 01.10 மணிக்கு கிளம்பும்.

எர்ணாகுளம் - கே.எஸ்.ஆர்., பெங்களூரூ எக்ஸ்பிரஸ் கோவையில் சுமார் 35 நிமிடங்கள் நிறுத்தப்படும். அதன்படி, மதியம் 12.50 மணிக்கு கிளம்ப வேண்டிய இந்த ரயில், 01.25 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும்.

இதேபோல, சென்னை எழும்பூர் - மங்களூரூ சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், டாடா/தன்பாத் - அலப்புழா எக்ஸ்பிரஸ், கே.எஸ்.ஆர்., பெங்களூரூ - எர்ணாகுளம், சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் சுமார் 15 நிமிடங்கள் இருகூர் ரயில் நிறுத்தத்தில் நிறுத்தி வைக்கப்படும்.

02-ம் தேதி தாமதமாக இயக்கப்படும் ரயில்கள்: ஜெய்ப்பூர்- கோவை அதிவிரைவு எக்ஸ்பிரஸ், ஈரோடு ரயில்நிறுத்தத்தில் சுமார் 40 நிமிடங்கள் நிறுத்தப்படும். 

04-ம் தேதி தாமதமாக இயக்கப்படும் ரயில்கள்: கோவை - சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ், கோவை சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் - இந்தூர், மங்களூரூ சென்ட்ரல் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் - ஐதராபாத் சபரி எக்ஸ்பிரஸ், பாலக்காடு டவுன் - ஈரோடு பயணிகள் ரயில் ஆகியவை சுமார் 15 நிமிடங்கள் பீளமேடு ரயில் நிறுத்தத்தில் இருந்து தாமதமாக இயக்கப்படும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...