கோவையில் அடுத்த நான்கு நாட்களுக்கு காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் - வேளாண் பல்கலை., தகவல்

கோவை: காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் மரங்களின் கிளைகள் அல்லது வளைந்து வளர்ந்துள்ள மரங்கள் கீழே விழும் அபாயம் உள்ளது.

கோவை: காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் மரங்களின் கிளைகள் அல்லது வளைந்து வளர்ந்துள்ள மரங்கள் கீழே விழும் அபாயம் உள்ளது. அதனால் மரங்களுக்கு கீழே நிற்க வேண்டாம் எனவும் கால்நடைகளை மரங்களுக்கு கீழே கட்ட வேண்டாம் என்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நம்மிடம் கூறுகையில், "கோவையில் அடுத்த நான்கு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் மழைக்கும் வாய்ப்புள்ளது. 

இதனிடையே பகல் நேர வெப்ப நிலையானது 30 முதல் 31 டிகிரி செல்சியாஸ்-ஆகவும், இரவு நேர வெப்ப நிலை 20 முதல் 21 டிகிரி செல்சியாஸ்-ஆகவும் நிலவ வாய்ப்புள்ளது.

காற்றின் வேகம்:

கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களைப் பொறுத்தவரையில் 18 முதல் 20 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீச வாய்ப்புள்ளது. 

வெற்று இடங்களில் சூழல் காற்று வீச வாய்ப்புள்ளது. இதனால் சிதிலமடைந்த மரங்களையும், மர கிளைகளையும் முன்கூட்டியே அகற்றிவிடுவது நல்லது.

அதே போன்று, வாழை மரங்களுக்கு முட்டுக் கொடுக்க வேண்டும், கரும்புகளுக்கு கயிறு கட்டி காற்றின் தாக்கத்திலிருந்து காத்துக்கொள்ள வேண்டும்.

திருப்பூர் மாவட்டத்தில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது, பல்லடம், உடுமலைபேட்டை போன்ற பகுதிகளில் உள்ள காற்றாலைகள் மூலம் மின்சாரம் அதிக அளவில் கிடைக்க வாய்ப்புள்ளது." என்றார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...