வரும் 17-ம் தேதி கரூர் மற்றும் திருச்சி மார்க்கமாக இயக்கப்படும் ரயில்சேவையில் மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக கரூர் - திருச்சி இடையிலான ரயில்சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் 17-ம் தேதி முதல் சேலம் மார்க்கமாக இயக்கப்படும் சில ரயில்கள் ரத்தும் செய்யப்பட்டுள்ளது.

பொறியியல் பணிகள் காரணமாக கரூர் - திருச்சி இடையிலான ரயில்சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் 17-ம் தேதி முதல் சேலம் மார்க்கமாக இயக்கப்படும் சில ரயில்கள் ரத்தும் செய்யப்பட்டுள்ளது.

ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள்:

வரும் 17-ம் தேதி கரூர் ரயில்நிலையம் - திருச்சி பயணிகள் ரயில் முத்தரசன்நல்லூர் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. முத்தரசநல்லூர்- திருச்சி இடையிலான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ரயில்நிலையம் - கரூர் ரயில்நிலையம் ரயிலானது, திருச்சி ரயில்நிலையம்-முத்தரசன்நல்லூர் இடையிலான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் ரயில் முத்தரசன்நல்லூர் ரயில் நிறுத்தத்தில் இருந்தே இயக்கப்படுகிறது.

ஈரோடு ரயில்நிலையம் - திருச்சி ரயில்நிலையம் பயணிகள் ரயில், முத்தரசன்நல்லூர் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. முத்தரசநல்லூர்- திருச்சி இடையிலான ரயிலின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

17-ம் தேதி தாமதமாக இயக்கப்படும் ரயில்கள்:

பாலக்காடு டவுன் - திருச்சி ரயில்நிலையம் ரயில், திருப்பூர்- முத்தரசன்நல்லூர் இடையே 01.40 மணிநேரம் நிறுத்திவைக்கப்படும்.

திருச்சி ரயில்நிலையம் - பாலக்காடு டவுன் ரயிலின் புறப்பாடு நேரம் 01.30 மணிநேரம் தாமதமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 01.00 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட வேண்டிய இந்த ரயில், 02.30 மணிக்கு கிளம்புகிறது.

இதேபோல, லோகூர் - பொம்மிடி நிறுத்தம் அருகே பாலக் கட்டுமானப் பணிகள் நடைபெற இருப்பதால், 17 மற்றும் 24 ஆம் தேதிகளில் சேலம் மார்க்கமாக இயக்கப்படும் ரயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அலப்புழா-டாடா/தன்பாத் எக்ஸ்பிரஸ் கோவை - சேலம் இடையே 01.40 மணிநேரம் நிறுத்தப்படும். இதேபோல, சேலம்- காட்பாடி ரயில்நிலைம் ரயில் 01.20 மணிநேரம் சேலம்-லோகூர் இடையே நிறுத்தப்பட்டு இயக்கப்படும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...