கோவையில் போலீஸ் வாகனம் மோதி முதியவர் பலி: நேருக்கு நேர் மோதிய காட்சிகள் வெளியீடு

கோவை: கோவையில் கடந்த 12-ம் தேதி காவல்துறை வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளது.


கோவை: கோவையில் கடந்த 12-ம் தேதி காவல்துறை வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளது.

கோவையை அடுத்துள்ள கணியூர் சுங்கச்சாவடியில் கடந்த 12-ம் தேதி இருசக்கர வாகனமும், காவல்துறை வேன் வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் சாமளாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ் (64) என்பவர் பலியானார். உடன் வந்த இவரது மனைவி தேவி (55) படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



இந்த சூழலில், விபத்து தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், கணியூர் சுங்கச்சாவடியின் அருகே கணவன்-மனைவி இருவரும், இரு சக்கர வாகனத்தில் ஒரு வழிப்பாதையில் செல்ல முயற்சித்ததும், அதனால், விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக கருமத்தம்பட்டி போலீசார், காவல்துறை வாகனத்தை ஓட்டி வந்த கருப்புசாமி என்ற காவலர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...